தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் – அரசு வட்டாரங்கள் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டு தொழில் நல வாரியம் மூலமாக ரூ.2000 நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அவ்வாறு நிதி வழங்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அதனை அமல்படுத்தியுள்ளது. மேலும் அதனை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு மார்ச் மாதம் முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை அமலில் இருந்தது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது. இதனை சரி செய்ய அரசு தரப்பில் தொழில் நல வாரியம் மூலமாக ரூ.2000 நிதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு தொடர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இந்த ஆண்டும் கொரோனா வீரியம் குறையாமல் உள்ள காரணத்தினால் இந்த ஆண்டும் நிவாரணம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏற்கனவே நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.2000 வழங்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது தொழில் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.