தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு தொடர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
வேலூர் மாவட்டத்தில் வருகிற 25 ஆம் தேதி மற்றும் மே 1 அன்று மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுபான கடைகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றதால் ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 25 & மே மாதம் 1 ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் ஏப்ரல் 25 ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி மற்றும் மே மாதம் 1 ஆம் தேதி மே தினம் என்பதால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!
ஒரு பக்கம் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபான கடைகள் மட்டும் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி செயல்படுவதால் பல தரப்பில் இருந்து இதுகுறித்து விமர்சனம் வந்துள்ளது. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக கொரோனா தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.