தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அதிகாரிகள் வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கப்படுவதை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் தேவையின்றி விடுமுறை எடுக்கக் கூடாது என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் மே மாதம் 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அரசு, தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதற்கான டோக்கன்களை இன்று முதல் வீடு வீடாக வந்து ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள். கொரோனா நிவாரண நிதி மே மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும். எனவே ரேஷன் கடை ஊழியர்கள் தேவையின்றி விடுமுறை எடுக்க கூடாது என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உடல்நலக் குறைவு காரணமாக விடுமுறை தேவைப்பட்டால் உரிய காரணங்களை தெரிவித்து விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் – அரசு உத்தரவு!!
முழு ஊரடங்கு நேரத்தில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் கடைகளுக்கு சென்று தங்களது தொகையை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.