தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் கடந்த மே 8ஆம் தேதி மூன்று முக்கிய அதிகாரிகள் பணி மாற்றம் செய்யபட்டதை தொடர்ந்து, மேலும் 9 அதிகாரிகள் இன்று (மே 10) பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான தமிழக அரசின் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணி மாற்றம்
தமிழகத்தில் கடந்த மே 2 ஆம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் படி மே 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, மக்களுக்கு உதவும் வகையில் பல சலுகைகளையும் அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் தமிழகத்தின் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி வந்த மூன்று அதிகாரிகள் கடந்த மே 8ஆம் தேதி அன்று பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு – புதிய அரசு எடுக்கப்போகும் முடிவு?
டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஏடிஜிபியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையராக, ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பி.தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர சில ஐபிஎஸ் அதிகாரிகள் கொரோனா பணியில் ஈடுபட வேண்டும் எனவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகளை பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சிபிசிஐடி தலைவராக ஷகீல் அக்தர், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமி, கூடுதல் காவல் தலைவராக எம்.ரவி, சென்னையின் உளவுத்துறை ஜிஜியாக ஈஸ்வர மூர்த்தி, உளவுத்துறையின் டிஜிஜி யாக ஆசியம்மாள், சிறப்பு பிரிவு சிஐடி எஸ்.பி யாக அரவிந்தன், பாதுகாப்பு பிரிவு சிஐடி-1 எஸ்.பி யாக திருநாவுக்கரசு, பாதுகாப்பு பிரிவு சிஐடி -2 எஸ்.பி யாக சாமிநாதன், உளவுத்துறை குற்றப்பிரிவின் எஸ்.பி யாக சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.