தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 5 மாவட்டங்களுக்கு இன்று (நவ. 4) ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து நேற்று முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று (நவ. 4) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன் படி நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.