தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தமிழகத்தில் கோடை காலம் போல இல்லாமல் மழைக் காலம் போல வானிலை இருந்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் இலேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயில் சுட்டெரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மறையாக மழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவது தான். மேலும் இதன் காரணமாக இன்றும் (மே 7), நாளையும் (மே 8) பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் இலேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வெளியான அறிவிப்பில் கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி,நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 14 மாவட்டங்களில் இடி உடன் கூடிய இலேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!