தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும்:
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தாக்கத்தில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (டிச. 13 ) மற்றும் நாளை (டிச. 14) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போல டிச.15ம் தேதியும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் – துணை முதல்வர் உறுதி!
மேலும் டிச. 16 மற்றும் டிச. 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதே போல டிச. 18 மற்றும் டிச. 19ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிச. 14 முதல் டிச. 16 வரை அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.