தமிழகத்தில் இன்று (அக்.14) 25 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் அலர்ட்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 13) முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உங்க கிட்ட 10 ரூபாய் நோட்டுகள் அதிகமா இருக்கா..?? ” அப்போ, இந்த பதிவு உங்களுக்கு தான்”..!!
அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருவாரூர், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், குமரி, விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


























