தமிழக பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை மே மாதம் தொடக்கம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டத்தின் மூலமாக 25 சதவிகிதம் மாணவர் சேர்க்கை வருகிற மே மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. மேலும் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வழக்கமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால் தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பின்னர் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
ஆனால் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் முதலே தொடங்கப்பட்டன. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் படிக்க அரசு வழங்கும் இலவச கட்டாயக்கல்வி திட்டத்தின் மூலமாக 25 சதவிகித மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. வழக்கமாக இந்த திட்டத்தின் மூலம் மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். அனால் கொரோனா காரணமாக அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை மே மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக சேரும் மாணவர்களுக்கு LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் படிக்கலாம். அதற்கான கட்டண தொகையை அரசே அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும்.