தமிழகத்தில் அக்.28 ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் வருகிற அக்.28 ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரிய பிரச்சனையாக இருப்பது வேலைவாய்ப்பின்மை தான். அதை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வருகிற அக். 28ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் ராஜபாளையத்தில் நடைபெற இருக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், அக். 28ம், தேதி ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
அதிர்ச்சி அளிக்கும் வணிக கட்டிட மதிப்பு – வரிவருவாய் பாதிக்கும் அபாயம்!
இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் நூறுக்கு மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.