பிப்ரவரி 25 இல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பற்றோருக்கான வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
TN Job “FB Group” Join Now
இதில் வேலைவாய்ப்பு வழங்க பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த முகாமில் கலந்து கொள்ள 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ, பட்டப்படிப்பு, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த முகாமில் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
தமிழக அரசு பள்ளிகளில் 100 சதவிகிதம் மாணவர் சேர்க்கை – ஆசிரியர்கள் விளக்கம்!!
அயல் நாட்டில் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளும், சுய வேலைவாய்ப்பு கடனுதவி திட்டங்கள் குறித்தும் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாக கலந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் அரசு, தனியார் துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் பேட்டி!!
முகாமிற்கு வருபவர்கள் தங்களது சுயகுறிப்புடன், கல்விச் சான்றிதழ் மாற்று ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். மேலும் அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்