தமிழகத்தில் இன்று முதல் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை – விண்ணப்பப் பதிவு தொடக்கம்!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி இருக்கிறது
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த நிலையில், மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (மே 19) காலை வெளியானது. அதில் சுமார் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், தேர்ச்சி விகிதம் 91.39 என பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதன் படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், படிப்புகளில் சேரவும் மாணவர்கள் இன்று (மே 20) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.