போலீஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!!!!!!!

0

போலீஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் – தமிழக அரசு உத்தரவு !!!!!!!

தமிழக காவல்துறையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது

வேலைவாய்ப்பு செய்திகள்

போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்:

தமிழகத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை உள்துறை செயலாளர் பிரபாகரன் வெளியிட்டார். பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் பின்வருமாறு,

மத்திய அரசு பணியில் இருந்த பி.கே.ரவி தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய டேவிட்சன் போலீஸ் அகாடமி இயக்குனராக பணிமாற்றம் செய்யப்பட்டார். போலீஸ் அகாடமி இயக்குனராக இருந்த அம்ரேஷ்பூஜாரி தொழில்நுட்பபிரிவு கூடுதல் டி.ஜி.பியாக மாற்றப்பட்டார்.

டி.ஜி.பி அலுவகத்தில் எஸ்டாபிளிஸ்மென்ட் பிரிவில் மத்திய அரசு பணியில் இருந்த சந்தீப் மிட்டல் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டார். எஸ்டாபிளிஸ்ட்மென்ட் பிரிவில் ஐ.ஜியாக பணியாற்றி வந்த ஜோஷி நிர்மல்குமார் தற்போது தலைமை  ஐ.ஜி யாக மாற்றப்பட்டார். ஏற்கனவே தலைமை ஐ.ஜி யாக இருந்துகொண்டிருக்கும் செந்தாமரைக்கண்ணன் தற்போது செயலாக்கப்பிரிவு ஐ.ஜி யாக பொறுப்பு ஏற்பார்.

சைபர் கிரைம் போலீஸ் சுப்ரண்டாக, ஐகோர்ட் வழக்குகள் தொடர்பான மேற்பார்வை உதவி ஐ.ஜியாக பணியாற்றிய டாக்டர் சுதாகர் பதவி ஏற்கிறார். இந்த பணியில் ஏற்கனவே இருந்த சுப்ரண்ட் நிஷா மகப்பேறு விடுமுறையில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!