தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வாகனங்கள் ஒப்படைப்பு – காவல்துறை அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் வாகனங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும் என உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அவர்கள் அறிவிப்பு மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதற்கு புதிய முயற்சியாக இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வாகனம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை மீதி ஏராளமானோர் சாலைகளில் தேவையின்றி சுற்றி திரிந்தனர். இவர்களை கண்காணிக்க அதிக எண்ணிக்கையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ICMR வெளியீடு!!
உரிய ஆவணங்கள் வைத்திருப்போரை மட்டும் காவலர்கள் அனுமதித்தனர். இளைஞர்கள் பலர் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்தனர். இவர்களது வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். உளுந்தூர் பேட்டையில் 50க்கும் மேற்பட்டவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதற்கான உரிய ஆதாரங்களை காட்டினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருப்பி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான ஆதாரங்களை காட்டி தங்கள் வாகனங்களை பெற்று சென்றனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான ஆவணங்களை காட்டி வாகனங்களை எடுத்து சென்றனர். டிஎஸ்பியின் இந்த அறிவிப்பால் உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். டிஎஸ்பியின் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.