கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ICMR வெளியீடு!!
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 102 நாட்களுக்கு பின்னரே ஆண்டிஜென் பரிசோதனை செய்ய வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
ஐசிஎம்ஆர் அறிவுரைகள்:
கொரோனா என்ற கொடிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதிக உயிரிழப்புகளை நாடுகள் சந்தித்து வருகிறது. அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. ஆண்டிஜென் சோதனை மூலம் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ரூ.2000 முதல் தவணை பெறாதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!!
தற்போது ரெம்டெசிவிர் என்ற மருந்து கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் மனித உடலில் நுரையீரலை தாக்குகிறது. இதனால் நோயாளிகள் சுவாசிப்பதற்கு சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு செயற்கை ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சுவாசித்தலை உறுதிப்படுத்துகின்றனர். மருத்துவர்கள் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். மருத்துவர் அறிவுறுத்திய மருந்துகளை உரிய நேரத்தில் உண்ண வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் 104 நாட்களுக்கு பின்னரே ஆண்டிஜென் பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் கொரோனாவின் இறந்த துகள்கள் உடலில் சில காலத்திற்க்கு இருக்கும் அது பரிசோதனை கருவியில் பாசிட்டிவ் என்றே காட்டும். எனவே 104 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என ஐசிஎம்ஆர் கூறுகிறது. மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 6 மாதங்களுக்கு பிறகே பிற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.