தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

0
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக எவ்வாறு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

NIOS தேர்வுக்கட்டணம் – ஜூன் வரை காலக்கெடு நீட்டிப்பு!!

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு தேதி அறிவிக்கும் வரை ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்தே படிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதற்கான அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது பள்ளிகளில் செயல்பட்டு வருவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் ஆன்லைன் வகுப்புக்கு தொடர்ச்சியாக வராத மாணவர்கள் நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், “12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல பள்ளிகளில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பாடங்களை மாணவர்கள் முன்கூட்டியே படிப்பதால் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கல் எதுவும் இருக்காது. இதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர்”, என அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!