NIOS தேர்வுக்கட்டணம் – ஜூன் வரை காலக்கெடு நீட்டிப்பு!!
CBSE மற்றும் CISCE போன்ற இரண்டாம் நிலை மற்றும் மூத்த இடைநிலை தேர்வுகளுக்கான தேர்வுகளை NIOS நிர்வகித்து வருகிறது. அதன் படி ஜூன் மாத தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்த வேண்டிய காலக்கெடுவை NIOS நீட்டித்துள்ளது.
தேர்வு கட்டணம்:
NIOS, மாணவர்களின் இடைநிலை மற்றும் உயர் நிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தும் இறுதி தேதியை நீட்டித்துள்ளது. மேலும் மே 15 வரை கட்டணம் செலுத்துவதற்கான போர்டல் திறந்திருப்பதாகவும், ஜூன் மாதம் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் இந்த கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இடைநிலை மற்றும் உயர்நிலை தேர்வுகளுக்கான தேதிகளை மாற்றப்படலாம் என NIOS சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – ஜூன் 3 இல் அறிவிப்பு?
இது குறித்து NIOS ஏப்ரல் மாதம் தெரிவிக்கையில், ‘நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் கற்பவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, தேர்வுகளின் அட்டவணையை மாற்றியமைக்க நினைத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தேர்வுகளை எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, டி.டி.எச் சேனல்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் படி தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியாளர்கள் பாடங்களை நடத்தி வருகிறார்கள். அதாவது ஆன்லைன் வழியாக பாடங்களை கவனிக்க முடியாத மாணவர்களுக்கு இந்த வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நடத்திய மறுஆய்வு கூட்டத்தில், NIOS யின் தேர்வு முறையை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும் NIOS பாடத்திட்டங்களை NCERT களுடன் இணைக்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.