தமிழக அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – ஜூன் 3 இல் அறிவிப்பு?
ஜூன் 3ம் தேதியன்று கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கான CPS (புதிய ஓய்வூதியம்) திட்டம் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
CPS திட்டம்:
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக CPS திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 10% வழங்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக இதனை முன்வைத்து வந்தனர்.
தமிழகத்தில் மூன்று நேரமும் இலவச உணவு – திட்டம் துவக்கி வைப்பு!!
திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்தது. அதன்படி, திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வர் கையெழுத்திட்டார்.
TN Job “FB
Group” Join Now
அதேபோல், வரும் ஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்த நாள் அன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் முதல்வரால் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மிகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
புதிய தமிழக அரசு ஓவ்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு என்ன செய்யப்போகிறது?நிலுவையிலுள்ள 6வது ஊதியக்குழு தொகை கிடைக்குமா? DA என்னவாயிற்று?
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் DA?
எந்த அரசு வந்தாலும் அரசு ஊழியர்கள் தான் சிறப்பாக ருக்கி மார்கள்
தனியார் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
உண்மையில் புதிய ஓய்வூதிய திட்டம் மிகவும் அதிக நன்மை பயக்கும், நாம் செலுத்தும் பங்களிப்பு தொகைக்கு சமமான தொகை பணியில் சேர்ந்த நாளில் இருந்து அரசு செலுத்துகிறது.
நான் பழைய திட்டத்தில் உள்ள அரசு பணியாளர் தான்…
34 ஆண்டு பணிக்கு பிறகு எனது கணக்கில் சுமார் 3 லட்சம் தான் உள்ளது. அவ்வப்போது எடுத்ததால் குறைந்தது…
அப்ப இப்ப பழைய பென்சன் திட்டத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் புதிய
பங்களிப்பு ஒய்வூதியம் வழங்கலாமா? என்ன சொல்கறீர்கள்
இப்போ இருக்கும் நிலைமையில் எதுவும் நடக்காது