தமிழகத்தில் மூன்று நேரமும் இலவச உணவு – திட்டம் துவக்கி வைப்பு!!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பசியால் வாடாதவாறு 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் சேவை இன்று (மே 11) துவங்கப்பட்டுள்ளது.
இலவச உணவு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கு தடை ஏற்படாதவாறு தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்ய முடிவெடுத்துள்ளது. அதன் படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அனைத்து கடைகளும் செயல்பட தடை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
தவிர ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நேற்று (மே 10) தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார். தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மே 15ஆம் தேதிக்கு மேல் நிவாரண நிதி வழங்குவதற்கு, டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை நகரத்தில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், அவர்களின் பசியைப் போக்குவதற்காக 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று (மே 11) துவங்கி வைத்தார். இதன் மூலம் ஏழை மக்கள் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக இந்த இலவச உணவு வழங்கும் திட்டம் அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்டது என்றாலும் , இந்த திட்டம் மக்களின் பசியை போக்குவதால், அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், கொரோனா பொது முடக்க காலத்திலும் அம்மா உணவகத்தில் மக்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்குவதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.