இன்று முதல் அனைத்து கடைகளும் செயல்பட தடை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் இன்று முதல் அத்தியாவசிய தேவைகள் விற்பனை செய்யும் கடைகள் பகல் 12 மணிக்கு மேல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடைகளுக்கு தடை:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. நிலைமையை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இரவு ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை எதுவும் பலனளிக்காத காரணத்தினால் தற்போது புதிய கட்டுப்பாடுகள் குறித்து புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
WhatsApp பயனாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – சேவைகள் நிறுத்தப்படும் ஆபத்து!!
அதன்படி தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தவிர கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பின் படி, அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 2049 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் உயிரிழந்து உள்ளனர்.