இந்தியாவில் பருவமழை பொய்த்ததால் வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது. அதனால் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வெங்காய விலை
இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வெங்காய வரத்து குறைவாக இருந்ததால் விலை தாறுமாறாக உயர்ந்தது. அதனால் வெங்காய விலையை குறைக்க அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன் காரணமாக விலை சற்று குறைந்தது. தற்போது பருவமழை பொய்த்ததால் விளைச்சல் குறைந்த்துள்ளது. மேலும் வெங்காய உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சிறந்த FD திட்டம் – முழு விவரம் இதோ!
மேலும் விலை உயர்வை தடுக்க அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அவ்வாறு விலை அதிகரித்தாலும் அதனை தடுக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. இதற்காக ஐந்து லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து, இடையக இருப்பை, அரசு தயார் செய்து வருகிறது. சமையலுக்கு தேவையான முக்கிய பொருட்களில் ஒன்றாக வெங்காயம் இருக்கிறது. அதனால் அதன் விலை ஏற்றத்தை குறைப்பது அரசின் கடமையாகும்.