தமிழகத்தில் அக்டோபர் மாத மின் கணக்கீடு – அரசு புதிய உத்தரவு!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டணம்
தமிழகத்தில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த டிச 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்கியது. அதனால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் அதனால் மின் கணக்கீடு செய்யும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த 4 மாவட்டங்களிலும் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற எளிய வழி – விவரங்கள் உள்ளே!
ஏற்கனவே அக்டோபர் மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்த டிச. 4 முதல் டிச. 7 வரை கடைசி நாளாக இருந்தது. ஆனால் புயல் பாதிப்பு காரணமாக கால அவகாசம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து அபராத தொகை இல்லாமல் டிச. 18 வரை மின் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் கால அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.