தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!

0
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் நோய் பரவலை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள், மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்ரல் 12) ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் முடிவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தாக்கம்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. சட்டமன்ற தேர்தல் காரணமாக அரசு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தலைமை செயலாளர் சில புதிய கட்டுபாடுகளை அறிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முக்கிய முடிவுகள் எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இதன்படி சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மருத்துவ நிபுணர்கள், அமைச்சர் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், வேலுமணி போன்றோர் பங்கேற்கிறார்கள்.

தமிழக வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ‘இது’ கட்டாயம் – சுற்றறிக்கை வெளியீடு!!

கொரோனா பரவல் சென்னையில் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முதல்வர் இந்த ஆலோசனையை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுவது குறித்தும், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அதே போல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்க தேவையான படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் கொரோனாவிற்கு தற்போது விதித்த கட்டுப்பாடுகள் போதுமா அல்லது இரவு நேர ஊரடங்கு தேவையா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் அலுவலகங்களில் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!!

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை மற்றும் அங்கு எடுக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து இரவு ஊரடங்கு அமல்படுத்தலாமா? அல்லது முழு ஊரடங்கு அமல்படுத்தலாமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!