தமிழக வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ‘இது’ கட்டாயம் – சுற்றறிக்கை வெளியீடு!!
தமிழகத்தில் உள்ள வங்கிகளில் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை வங்கிக்குள் வர அனுமதிக்க கூடாது என தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
முகக்கவசம் கட்டாயம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கூட்டம் அதிகமாக வரும் வங்கிகளுக்கான விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கையை தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் அனுப்பியுள்ளது. அதில் கொரோனா காரணமாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கிகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
அதன் முடிவில், வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வரும்போது வெப்பநிலை சோதனை செய்ய வேண்டும். அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அவ்வாறு அணியாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் வங்கிகளில் வேலைகளை முடிக்கும் வரை முகக்கவசத்தை கழட்டாமல் இருக்க வேண்டும். தொடுதல் இல்லாத வகையில் கை கழுவும் கிருமிநாசினிகளை நுழைவு வாயிலிலும், பொது இடங்களிலும் வைக்க வேண்டும்.