தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் மூடல் – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிக்கு செல்வதால் 2000 மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளது.
மினி கிளினிக் மூடல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 13,000யை கடந்து செல்வதால், கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் இறக்குமதிக்கு கலால், செஸ் வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் புதிதாக திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரிந்து வரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன.