ஆக்சிஜன் இறக்குமதிக்கு கலால், செஸ் வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!!

0
ஆக்சிஜன் இறக்குமதிக்கு கலால், செஸ் வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு!!
ஆக்சிஜன் இறக்குமதிக்கு கலால், செஸ் வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு!!
ஆக்சிஜன் இறக்குமதிக்கு கலால், செஸ் வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையை தடுக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான வரியை 3 மாதங்களுக்கு நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கைமீறி சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல மருத்துமனைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மீதமுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் படுக்கும் அவலம் கூட ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு முன்னணி ஆக்சிஜன் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி பல இடங்களில் ஆக்சிஜன் ஆலை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பரிந்துரை செய்தது.

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு 104 அவசர எண்ணை அழைக்கலாம் – அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அவ்வாறு இறக்குமதி செய்த ஆக்சிஜனுக்காக கலால் வரி, சுகாதார செஸ் வரி நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.பிரதமர் தலைமையிலான நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!