தமிழகத்தில் முழு ஊரடங்கு அச்சம் – ரயில் நிலையங்களில் குவியும் புலம்பெயர் தொழிலாளர்கள்!!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளதால் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
கொரோனா எதிரொலி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது.
TN Job “FB Group” Join Now
இதே நிலைமை தொடர்ந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பொருளாதாரம் பாதிக்கும் என்ற அச்சத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டமாக காத்திருக்கின்றனர்.
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!!
நேற்று காலை திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் ரயில்களில் பயணம் செய்ய கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர். அதன் காரணமாக ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.