சென்னையில் நாளை முதல் பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி!!
புதிய கட்டுப்பாடுகள் :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநில அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவல் தமிழகத்தில் 21,000 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளது. நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகிறது. தனி நபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் தமிழகத்தில் தொற்று பரவல் மேலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தினசரி உயர்ந்து வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பிற்கு ரூ.50 ஆயிரம் கோடி ஊக்கத்தொகை – RBI கவர்னர்!!
இதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன் படி மளிகை, காய்கறி கடைகள் போன்றவை மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மற்ற கடைகள் திறக்க அனுமதி கிடையாது. அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் .
ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் – முகேஷ் அம்பானி அறிவிப்பு!!
மேலும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளை கொண்டு இயங்க வேண்டும் எனவும் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதன்படி நாளை முதல் சென்னை மாநகர பேருந்துகள் 50 சதவீத பயணிகள் கொண்டு இயங்கும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்