நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பிற்கு ரூ.50 ஆயிரம் கோடி ஊக்கத்தொகை – RBI கவர்னர்!!
தற்போது கொரோனா பரவலின் இரண்டாவது அலை தாக்கத்தினால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை நிலைமையை சமாளிக்க ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
கொரோனா நோய் பரவல்:
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மிகவும் கடுமையான சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வாக தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திந்தா தாஸ் பல புதிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார். ரிசர்வ் வங்கி தொடர்ந்து நிதி நிறுவனங்களை கண்காணித்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தகுந்த வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பணி – சுற்றறிக்கை வெளியீடு!!
கொரோனாவின் இரண்டாவது தாக்கத்தினை சமாளிக்க ரிசர்வ் வங்கியின் சார்பில் 50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. அடுத்து வரும் இரு வாரங்களில் அரசுத்துறை பத்திரங்களை 35 ஆயிரம் கோடிக்கும் ரிசர்வ் வங்கி வாங்க இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதை அடுத்து மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது உரையில் அவர் மக்களை கேட்டுக்கொண்டார். அதே போல் நாட்டில் உள்ள பொருளாதார நிலை, நிதி நிறுவனங்களின் தற்போதைய சூழல் ஆகியவற்றை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பிற்காக ரூ.50 ஆயிரம் கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்