தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!!

0
தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை வெளியீடு!!
தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை வெளியீடு!!
தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!!

தமிழகத்தில் 2 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக இணைப்புப் பாடம் கற்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி நேரங்கள் ஒதுக்கப்பட்டு பாடங்கள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அதற்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளது.

கல்வி தொலைக்காட்சி:

தமிழகம் முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் பரவிய கொரோனா நோய்த்தொற்றால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிறகு காலதாமதமாக மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கபடவே இல்லை. இதனால் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கும் தங்களின் குழந்தைகளின் கல்வி குறித்த கவலை அதிகரித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

கொரோனா நோயின் தாக்கம் அதிகரிப்பதால் மாணவர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. பிறகு ஆன்லைன் மூலம் கற்பித்தல் நடைபெற்று வந்தது. மேலும் கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பிறகும் அதன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது ஆன்லைன் வகுப்புகளில் பங்கு கொள்ள முடியாத மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலமாக பயிற்சி புத்தகங்கள், கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 நாட்கள் முழு ஊரடங்கு? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிப்பு!

இருப்பினும் நீண்ட விடுமுறை கற்றல் & கற்பித்தலில் மிகுந்த இடைவெளியை உருவாக்கியுள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டும் மாணவர்களின் திறமையை வளர்க்கும் நோக்கிலும் பள்ளிக் கல்வித்துறை 2 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக இணைப்புப் பாடம் கற்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதில் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் ஓவியம், நடனம், விளையாட்டு, பாடல் போன்ற பல்வேறு இணைப்பு பாடங்கள் ஏப்ரல் 22 முதல் மே 10 வரை கற்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேர அட்டவணை:

  • 2 ஆம் வகுப்பு – காலை 11.30 முதல் 12 மணி வரை & நண்பகல் 4 மணி முதல் 4.30 வரை
  • 3 ஆம் வகுப்பு – காலை 11 முதல் 11.30 மணி வரை & மாலை 3.30 மணி முதல் 4 வரை
  • 4 ஆம் வகுப்பு – காலை 10.30 முதல் 11 மணி வரை & மாலை 3 மணி முதல் 3.30 வரை
  • 5 ஆம் வகுப்பு – காலை 10 முதல் 10.30 மணி வரை & நண்பகல் 2.30 மணி முதல் 3 வரை
  • 6 ஆம் வகுப்பு – காலை 9.30 முதல் 10 மணி வரை & நண்பகல் 2 மணி முதல் 2.30 வரை
  • 7 ஆம் வகுப்பு – காலை 9 முதல் 9.30 மணி வரை & நண்பகல் 1.30 மணி முதல் 2 வரை
  • 8 ஆம் வகுப்பு – காலை 8.30 முதல் 9 மணி வரை & நண்பகல் 12.30 மணி முதல் 1 வரை
  • 9 ஆம் வகுப்பு – காலை 8 முதல் 8.30 மணி வரை & நண்பகல் 12 மணி முதல் 12.30 வரை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!