தமிழகத்தில் 3 நாட்கள் முழு ஊரடங்கு? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தற்போது மாநிலம் முழுவதும் 3 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் மிக அதிகமான அளவில் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகளாக 3 நாட்கள் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளது.
55 மணி நேரம் முழு ஊரடங்கு அமல் – கொரோனா பரவல் எதிரொலி!!
அதேபோல் திரையரங்குகள், மால்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். மேலும் டாஸ்மாக், காய்கறி மளிகை கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பகல் நேரத்திலும் ஊரடங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது.