55 மணி நேரம் முழு ஊரடங்கு அமல் – கொரோனா பரவல் எதிரொலி!!

0
55 மணி நேரம் முழு ஊரடங்கு அமல் - கொரோனா பரவல் எதிரொலி!!
55 மணி நேரம் முழு ஊரடங்கு அமல் - கொரோனா பரவல் எதிரொலி!!
55 மணி நேரம் முழு ஊரடங்கு அமல் – கொரோனா பரவல் எதிரொலி!!

நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக புதுவையில் 55 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

முழு ஊரடங்கு:

அனைத்து பகுதிகளிலும் கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது மக்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் அனைவரையும் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் புதுவையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்பு புதிய உச்சம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுவை அரசு அறிவித்தது. அதன்படி தற்போது நேற்றிரவு (ஏப்ரல் 23) 10 மணி முதல் வருகிற திங்கள் கிழமை (ஏப்ரல் 26) காலை 5 மணி வரை சுமார் 55 மணி நேர பொதுமுடக்ககம் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தியேட்டர்கள், மால்கள் மூடல்? புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு!

பொதுமுடக்கத்தின் போது அத்தியாவசிய தேவைகளான பால், பெட்ரோல் பங்குகள், மளிகை, காய்கறி கடை, இறைச்சி மற்றும் மீன் கடைகள் ஆகியவற்றை கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கின் பொழுது பேருந்து, ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!