தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – டிசம்பர் 10 கடைசி நாள்!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - டிசம்பர் 10 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - டிசம்பர் 10 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – டிசம்பர் 10 கடைசி நாள்!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை விண்ணப்பம்

தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் 1.10.2023 உடன் தொடங்கும் காலாண்டுக்கு உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டினால் கடும் அபராதம் – வனத்துறை எச்சரிக்கை!

இந்த உதவித்தொகை பெற 10ஆம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களும் அதற்கு மேல் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை தொடர்ந்து புதுப்பித்து, 30.9.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த உதவிதொகை பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்விசான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!