தமிழக உணவகங்களில் பார்சல்கள் மட்டும் அனுமதி – புதிய கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக உணவகங்களில் காலை 6 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை பார்சல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
உணவகங்களில் கட்டுப்பாடு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இன்று தொடங்கி புதிய கட்டுப்பாடு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் பல தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. இதனை தொடர்ந்து உணவகங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து உண்பதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் அமர்ந்து உண்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் இன்று (ஏப்ரல் 26) முதல் பார்சல்கள் வழங்கப்படுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கபட்டுள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பார்சல் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
மே 3 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!!
இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக உணவகங்களுக்கு வாடிக்கையாளர்கள் வருகை தரவில்லை. இதனால் நாங்கள் நஷ்ட்டத்தை சந்தித்துள்ளோம். மேலும் சமைத்த உணவுகளும் வீணாகின்றன என வேதனை தெரிவித்துள்ளனர்.
பாரதியார் பல்கலை செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!
இந்நிலை தொடர்ந்தால் 90 சதவீத ஊழியர்களுக்கு வேலை அளிக்க முடியாத நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அம்மா உணவகங்களை போல அணைத்து உணவகங்களிலும் சமூக இடைவெளியுடன் சாப்பிட வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.