மே 3 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!!
கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் டெல்லியில் ஏற்கனவே 1 வாரம் அமல்படுத்தப்பட்டு இருந்த முழு ஊரடங்கு உத்தரவானது மேலும் ஒரு வார காலத்திற்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கடந்த திங்கட்கிழமை ஆறு நாள் முழு ஊரடங்கு உத்தரவினை அறிவித்தார். கொரோனா நோய்த்தொற்றுகள் இடைவிடாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், ஊரடங்கை இன்னும் ஒரு வாரம் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி அடுத்த திங்கள் (மே 3) அதிகாலை 5 மணி வரை தற்போதுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
ஊரடங்கு நேரத்தில் உணவு, மளிகைப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை விற்பனை செய்வது மற்றும் வழங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், நீதித்துறை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெற விரும்புவோரின் நடமாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை.
TN Job “FB Group” Join Now
டெல்லியில் இதுவரை இல்லாத அளவு கொரோனா தோற்று 30 முதல் 37 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.