தமிழகம் முழுவதும் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் – ஏற்பாடுகள் தீவிரம்!!

0
தமிழகம் முழுவதும் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் - ஏற்பாடுகள்
தமிழகம் முழுவதும் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் – ஏற்பாடுகள் தீவிரம்!!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் உள்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் படுக்கை வசதிகள்:

தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து தினம் தினம் புதிய உச்சம் தொடுகிறது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு ஆக்சிஜன் சிலிண்டருக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் இறக்க நேரிடுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் மற்ற மாநிலங்களுக்கும் இதே அவல நிலை நிலவுகிறது. இதனால் தமிழக பொதுப்பணி துறையினரால் கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு ரூ.135 கோடி கொரோனா நிதியுதவி வழங்கல் – சுந்தர் பிச்சை அறிவிப்பு!!

ஏற்கனவே கடந்த ஆண்டு 138 மருத்துவமனைகளில் ரூ.282.51 கோடி மதிப்பில் 27,806 படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு தனிமைப்படுத்தும் வார்டுகள், இதர சுகாதார வசதிகள் மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு 2,912 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டது.

வாட்ஸ்ஆப்பில் செய்திகளை மறைய வைக்கும் புதிய அப்டேட் – விரைவில் அறிமுகம்!!

அதேபோல் இவ்வாண்டு 2,895 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 550, அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500, அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூரில் 225, கிங்ஸ் இன்ஸ்டிடியூட் கிண்டியில் 200 மற்றும் சென்னையில் உள்ள இதர சுற்றுவட்டார 11 மருத்துவமனைகளில் 1420 கூடுதல் ஆக்ஸிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பொதுப்பணித்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ துறையை சார்ந்த மருத்துவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆகியோர் நாள்தோறும் கலந்து ஆலோசித்து இரண்டாம் அலையை எதிர்கொள்ள மருத்துவ துறைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பொதுப்பணித்துறை தீவிரமாகவும் துரிதமாகவும் செய்து வருகிறது என தெரிவித்துளள்னர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!