இந்தியாவிற்கு ரூ.135 கோடி கொரோனா நிதியுதவி வழங்கல் – சுந்தர் பிச்சை அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் கூகுள் நிறுவனம் சார்பில் ரூ.135 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிதியுதவி வழங்கல்:
கொரோனா இராண்டாம் அலை இந்தியாவில் மிக விரைவாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டுகிறது. கொரோனா முதல் அலையின் போது சந்திக்காத பேரிழப்பை தற்போது இந்தியா சந்தித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ள நிலையிலும் வைரஸ் பாதிப்பை குறைக்க முடியவில்லை. இதுவரை நாடு முழுவதும் 17,313,163 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் பல நாடுகளும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன. குறிப்பாக இந்தியாவின் வட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தடுப்பு மருந்துகள் இல்லாததாலும், ஆக்சிஜன் கருவி பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் அமெரிக்காவில் அமைத்துள்ள கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது.
தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு!!
அந்நிறுவனம் இந்தியாவின் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மருத்துவ உதவிக்காக ரூபாய் ரூ.135 கோடி நிதியுதவி அளிக்கும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இந்த நிதியானது கூகுள் நிறுவனம் மற்றும் ஊழியர்கள் சார்பாக அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.