தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை இன்று முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள், சுகாதாரத்துறை செயலருடன் இன்று (07-04-2021) பிற்பகல் ஆலோசனை நடத்த உள்ளார்.
சுகாதாரத்துறை செயலர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 25,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையிலும் முன்பு போலவே ஒவ்வொரு நாளும் 1000 பேர் வரை பாதிப்புக்குள்ளாகின்றனர்.
நேற்று (06-04-2021) தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை கையாளாமல் மக்கள் அலட்சியப்படுத்தும் விதத்தில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளிகளை பின்பற்றாமலும் காணப்பட்டனர். இதனால் கொரோனா தொற்றின் பரவல் மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 32% உயர்வு – அரசு ஆலோசனை!!
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (07-04-2021) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்கப்படாது எனவும், தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்