தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக புதிய ஏற்பாடு – கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று (பிப்.6) தெற்காசிய மாநாடு நடைபெற இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தெற்காசிய மாநாடு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்க விருப்பினால், அவர்களின் உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (பிப்.6) நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் என்னென்ன பல்கலைக்கழகங்கள் உள்ளன, என்னென்ன படிப்புகள் உள்ளன, அதில் விண்ணப்பிப்பது எப்படி என பல்வேறு தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
TNPSC குரூப் 4 தேர்வில் பாஸ் ஆகணுமா? இதை மட்டும் படிங்க!! நிச்சயம் வேலை!!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகரான கல்வி தரம் வழங்க வேண்டும் என அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக அவர்களின் எதிர்காலத்திற்காக இது செயல்படுத்தப்படுகிறது. மேலும், இந்த தெற்காசிய மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்க இருக்கிறார் .