69 சதவீத இடஒதுக்கீடு வழக்கு – தமிழக அரசு பதில்மனு தாக்கல்!!
தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தமிழக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் வழக்கு விசாரணை குறித்து சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன,
இடஒதுக்கீடு வழக்கு:
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை உட்பட பலவற்றில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு உட்பட்டு மற்றும் தனி ஆணையம் அமைத்து 69 சதவீத இடஒதுக்கீடு திட்டம் அமலில் உள்ளது.
தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும்!!
மேலும் நாட்டிலேயே தமிழகத்தில் தான் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. எனவே இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையின் போது, பிற வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிராவில் பின்பற்றப்படும் மராத்தா இடஒதுக்கீட்டிற்கும், தமிழகத்தில் அமலில் உள்ள இடஒதுக்கீட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனை இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க கூடாது.
தமிழகத்தில் கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் – அரசாணை வெளியீடு!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இடஒதுக்கீடு முறையை பின்பற்ற முடியாது என இரு எம்.டெக் பாடப்பிரிவுகள் மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே இந்த வழக்கு விசாரணை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்