தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயதை உயர்த்திய அரசாணை எதிர்த்து வழக்கு !
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உயர் நீதிமன்றம் உத்தரவு:
தமிழக அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் மே மாதம் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 58-ல் இருந்து 59 ஆக மாற்றப்பட்டது. அதனை 60 வயதாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் அன்று உயர்த்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் எம்சிஏ படித்துவிட்டு வேலைவாய்ப்பிற்காக எதிர்பார்த்து கொண்டிருக்கும் எங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாமல், அரசு பணியில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் வயது வரம்பை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தியது இல்லாமல் தற்போது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் எங்களை போல படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.
கொரோனா காரணமாக பொது வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது. மத்திய அரசு பணிகளில் பணியாற்றியவர்கள் 33 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் அல்லது 60 வயது பூர்த்தி செய்யும் வரை பணிபுரிய வேண்டும் என மத்திய அரசு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதையே தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்.
பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் கட்டாயம் இல்லை – AICTE அறிவிப்பு!!
எனவே அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எந்த சட்டம், எந்த விதிகள் அடிப்படையில் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என கேள்வி எழுப்பினார். மாநில அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி இந்த வழக்கை மார்ச் 18க்கு ஒத்திவைத்தார்.