அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு – ஏப்ரல் 30 தேதிக்குள் நடத்த உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகளை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு:
தமிழகத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுகளில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன்பின்னர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கு தொடர்பான மனுவில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என காத்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது, இது சட்டவிரோதமான விதிமீறல் கூட, எனவே உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்தார்.
இந்தியா விஷன்-2030 திட்டம் – 20 லட்சம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். அதன்பின்னர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வினை ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், துவக்கக் கல்வி இயக்குனர்களுக்கு என உத்தரவிட்டார்.