
மிகக் குறைந்த வட்டியில் வீட்டு கடன்…!! இதில் ரூ. 10 லட்சம் வரை வாங்கலாம்…!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அற்புத அறிவிப்பு…
சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தாலும், அதற்கான நிதி தேவை அதிகம் என்பதால் பலரின் விருப்பம் கனவாகவே மாறிவிடுகிறது. அந்தவகையில், தமிழ்நாடு அரசு வீடு கட்ட நிதி தேவை தேவைப்படும் மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் வீடு கட்டுமானம், வீடு பழுதுபார்ப்பு மற்றும் வீட்டு வசதிகள் செய்வதற்கு தேவையான நிதி கடனாக வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தில் 12% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையான ரூ. 10,00,000 வரை பெறலாம். மேலும், தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அதன்படி, இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆகும்.























