மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் – டோக்கன் பெறுவதற்கான தேதி அறிவிப்பு !!!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் வெளியில் சென்று அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சிரமப்படுவதால் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கப்படும்
கொரோனா தமிழகத்தில் தீவிரமாக பரவுவதால் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில், ரேசன் கடையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களை பெற ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று கூட்டுறவு சங்க ஊழியர் மூலமாக டோக்கன் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது ??
ரேசன் பொருள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் டோக்கனில் உள்ள நாள், நேரத்தில் ரேசனுக்கு சென்று பொருள் பெறலாம். சமூக இடைவெளி நடைமுறையை கடைப்பிடித்து மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
ஊரடங்கில் இந்த சேவைகளுக்கு அனுமதி !!!!
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |