தமிழகத்தில் திடீரென அதிகரித்த பூண்டின் விலை.. ரூ. 180க்கு விற்பனை – அதிர்ச்சியில் மக்கள்!

0
தமிழகத்தில் திடீரென அதிகரித்த பூண்டின் விலை.. ரூ. 180க்கு விற்பனை - அதிர்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் திடீரென அதிகரித்த பூண்டின் விலை.. ரூ. 180க்கு விற்பனை - அதிர்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் திடீரென அதிகரித்த பூண்டின் விலை.. ரூ. 180க்கு விற்பனை – அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ. 180க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

விலை உயர்வு

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றனர். இந்நிலையில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விலை உயர்வு ஒரு பக்கம் இருக்க, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில், தற்போது வெள்ளைப்பூண்டு விலையும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தொடங்கும் மழைக்காலம்.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்புகள்!

அதிலும் தினமும் சென்னைக்கு மட்டும் சுமார் 10 லாரிகளில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் சில நாட்களாக பூண்டு வரத்து குறைவாக இருப்பதால் விலை அதிகமாகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மாதம் ஒரு கிலோ பூண்டு ரூ. 25க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ பூண்டு ரூ.80க்கும், மலைப்பூண்டு ரூ. 180க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் உயர்வுக்கு விளைச்சல் பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதால் வரத்து குறைவும் ஒரு காரணம் என கோயம்பேடு உணவு தானிய மொத்த சந்தை வியாபாரி பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!