தமிழக சட்டமன்ற தேர்தல் – தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் ஆசிரியர்களுக்கானா தபால் வாக்களிக்கும் முறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் படி தொடங்கப்பட்டுள்ளது.
தபால் முறை வாக்குப்பதிவு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 4 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் தற்போது வரை 3 கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வேட்பளர் மனு தாக்கல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இந்த ஆண்டு 4024 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளவர்களுக்கு தபால் முறை மூலமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முடிந்த மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சிக்கு பின்னர் ஆசிரியர்கள் தபால் முறையில் வாக்களித்தனர்.
ஜேஇஇ தேர்வுகளில் கூடுதல் கட்டணம் வசூல் – தேசிய தேர்வு முகமை விளக்கம்!!
அதன்படி தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பல இடங்களில் பெட்டிகள் வைக்கப்பட்டு தபால் முறை மூலமாக வாக்களித்தனர். ஆனால் ஆசிரியர்களில் 50 சதவிகிதம் பேருக்கு தபால் முறை வாக்குகள் வழங்கப்படவில்லை என பல இடங்களில் புகார் எழுந்துள்ளது. அவர்களுக்கு தேர்தலுக்கு முந்தைய நாள் நடக்கும் வகுப்பில் தபால் வாக்குகள் செலுத்த விண்ணப்பபடிவம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.