ஜேஇஇ தேர்வுகளில் கூடுதல் கட்டணம் வசூல் – தேசிய தேர்வு முகமை விளக்கம்!!
மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க நடத்தப்படும் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு கூடுதல் விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்களுக்கு கட்டணம் திரும்பி வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஜேஇஇ முதன்மை தேர்வுகள்:
மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க தேசிய தேர்வு முகமை மூலமாக ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்வுகள் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்த 4 கட்ட தேர்வுகளிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இந்நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வுகளில் வசூலிக்கப்படும் கட்டண தொகையில் கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பின் படி, “இந்த ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வுகள் 4 கட்டமாக நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
இந்த தேர்வுகளை எழுத மாணவர்கள் 4 கட்ட தேர்வுக்கு ஒரே முறையாகவும் அல்லது தனித்தனியாகவும் கட்டணம் செலுத்தலாம். தற்போது மாணவர்கள் ஏப்ரல் மாத தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதில் மாணவர்கள் கூடுதல் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால், அது திரும்ப வழங்கப்படும். இதற்கான பணிகள் முதல்நிலை தேர்வுகள் முடிந்த பின்னர் தொடங்கப்படும்.
இந்தியாவில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு – மத்திய அரசு திட்டம்?
இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://nta.ac.in/ என்ற இணையதளத்தை அணுகலாம். இந்த தேர்வுகள் குறித்து ஏதாவது சந்தேகம் இருப்பின் [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 011-40759000 தொலைபேசி எண் வழியாக தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.