தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் – மே 2 வாக்கு எண்ணிக்கை!!

0
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் - மே 2 வாக்கு எண்ணிக்கை!!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் - மே 2 வாக்கு எண்ணிக்கை!!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் – மே 2 வாக்கு எண்ணிக்கை!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் அறிவித்து உள்ளார். மேலும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் அட்டவணை:

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அட்டவணை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற உள்ளதால் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அதில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு, தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திரகுமார் மற்றும் அலோக் வர்தன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவு நேரம் 1 மணிநேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – தமிழக முதல்வர் அறிவிப்பு!!

  • வாக்குப்பதிவு – ஏப்ரல் 6
  • வாக்கு எண்ணிக்கை – மே 2
  • மனுதாக்கல் ஆரம்பம் – மார்ச் 12
  • மனுதாக்கல் முடிவு – மார்ச் 19
  • வேட்புமனு பரிசீலனை – மார்ச் 20
  • வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் – மார்ச் 22

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!