தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பணம் எடுக்கும் வசதி – தகவல் தொழில்நுட்பத் துறை திட்டம்!
தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டுள்ளது.
இ சேவை மையம்:
தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கு அதிகமான இசேவை மையங்கள் இருக்கின்றன. இதன்மூலம் பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருவதால், லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் தொழில்நுட்ப துறை திட்டமிட்டுள்ளது. அதன் படி இசேவை மையங்களை DigiPay வரம்பிற்குள் கொண்டுவந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம் – நிதி அமைச்சகம் அறிவிப்பு!
இதன் மூலம் ஆதார் பயோமெட்ரிக் மூலமாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி ஏடிஎம் தவிர, இந்திய அஞ்சல்துறை ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி இருக்கிறது. மக்களுக்கு சேவையை மேம்படுத்த இசேவை மையம் மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.