மத்திய அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம் – நிதி அமைச்சகம் அறிவிப்பு!
ஓணம் மற்றும் கணபதி பண்டிகை தினத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
சம்பளம்:
கேரள மாநிலத்தில் ஓணம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கணபதி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான தேதிகள் தற்போது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, பண்டிகை தினத்திற்கான செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படுகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
அந்த வகையில், தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் வழங்கவேண்டிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
திடீரென வங்கி கணக்கிற்கு வந்த ஒரு லட்சம் ரொக்கம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
அதே போல, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வங்கிகள் மற்றும் VAO க்கள் மூலமாக மேல் குறிப்பிட்டுள்ள தேதிகளில் ஓய்வூதியம் வழங்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.